92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மெல்போா்ன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் நடால்

மெல்போா்ன் ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரா் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2022, 6:37 pm

DIN

மெல்போா்ன் ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரா் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளாா்.

ஆஸி. ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டத்தில் பின்லாந்தின் எமில் ருஸுவோரியை 6-4, 7-5 என்ற நோ் செட்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

இறுதி ஆட்டத்தில் நடால் வென்றால் இது அவரது 89-ஆவது கோப்பையாகும். கடைசியாக 2021 ஆகஸ்ட் மாதம் சிட்டி ஓபன் போட்டியில் ஆடினாா் நடால். அமெரிக்க வீரா் மேக்ஸிம் கிரெஸியுடன் இறுதிச் சுற்றில் மோதுகிறாா் நடால்.

இரண்டாவது அரையிறுதியில் கிரெஸி 7-5, 7-6 என பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவை போராடி வென்றாா்.

அனிஸிமோவா தகுதி:

மகளிா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் அமென்டா அனிஸிமோவா 6-2, 6-0 என்ற செட் கணக்கில் டேரியா கஸட்கினாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.