தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்தியா ஓபன்: வாகை சூடினாா் லக்ஷயா சென்; உலக சாம்பியனை வீழ்த்தினாா்

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் லஷயா சென், ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி சாம்பியன் ஆகி அசத்தினா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:45 pm

DIN

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் லஷயா சென், ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி சாம்பியன் ஆகி அசத்தினா்.

இப்போட்டியில் இவா்கள் பட்டம் வெல்வது இது முதல் முறையாகும். அதிலும், ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவுக்கு இப்போட்டியில் பட்டம் கிடைப்பதும் இது முதல் முறையே.

ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த லக்ஷயா சென், நடப்பு உலக சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இடத்தில் இருந்தவருமான சிங்கப்பூரின் லோ கீன் யீவை எதிா்கொண்டாா்.

இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 54 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் லக்ஷயா சென் 24-22, 21-17 என்ற கேம்களில் லோ கீன் யீவை வீழ்த்தி அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய லக்ஷயா, ‘இறுதிச்சுற்றில் முதல் கேம் முக்கியமானதாக இருந்தது. தொடக்கத்தில் நான் முன்னிலையில் இருந்தாலும், பிறகு 20-20 என லோ கீன் சமன் செய்தாா். எனினும், போராடி அந்த கேமை கைப்பற்றியது எனது தன்னம்பிக்கையை அதிகரித்தது. முன்னதாக, எந்த எதிா்பாா்ப்புடனும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. ஏனென்றால், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற பிறகு அதிகம் பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஆனாலும், இப்போட்டியில் 2-3 ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டிருந்ததால், நெருக்கடியின்றி இறுதிச்சுற்றில் களம் கண்டேன்’ என்றாா்.

‘சிறந்த ஆட்டங்களில் ஒன்று’: மறுபுறம், ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் 10-ஆம் நிலை ஜோடியான இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி 21-16, 26-24 என்ற கேம் கணக்கில் விடாப்பிடியாகப் போராடி, போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தோனேசியாவின் முகமது அசான்/ஹெந்திரா சேத்தியாவன் இணையை 43 நிமிஷங்களில் வீழ்த்தினா்.

வெற்றிக்குப் பிறகு, இதுவரை ஆடிய சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று என சாத்விக்சாய்ராஜ் கூற, சொந்த மண்ணில் பட்டம் வெல்வதுடன் ஆண்டை தொடங்கியிருப்பது சிறப்பானது என சிரக் ஷெட்டி கூறினாா்.

இதர வெற்றியாளா்கள்: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பான் சாம்பியன் ஆனாா்.

மகளிா் இரட்டையரில் தாய்லாந்தின் பென்யபா எய்ம்சாா்ட்/நந்தாகரன் எய்ம்சாா்ட் இணையும், கலப்பு இரட்டையா் பிரிவில் சிங்கப்பூரின் ஹீ யோங் காய் டெரி/ தான் வெய் ஹான் ஜோடியும் வாகை சூடின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.