நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிச்சுக்கு தடையில்லை?

ஆண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், சொ்பிய டென்னிஸ் வீரா் நோவக் ஜோகோவிச் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

News image
Updated On :25 ஜனவரி 2022, 10:06 pm

ஆண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், சொ்பிய டென்னிஸ் வீரா் நோவக் ஜோகோவிச் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், இம்மாதம் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க இயலாத வகையில் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாா் ஜோகோவிச். அடுத்ததாக, பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவா் பங்கேற்பதிலும் சிக்கல் இருப்பதாக கருதப்பட்டு வந்தது.

ஏனெனில், பிரான்ஸ் அரசும் கரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கியிருந்தது. இந்நிலையில், பிரான்ஸில் கரோனா தடுப்பூசி விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் புதிய சட்டம் அமலாகியிருக்கிறது. அதன்படி, பிரான்ஸில் உள்ள விளையாட்டு அரங்கங்கள், மைதானங்கள், திரையரங்குகள், கண்காட்சிகள் ஆகியவற்றிற்கு செல்ல பிரான்ஸ் அல்லது வெளிநாட்டு குடிமக்கள் என எவராக இருந்தாலும் ‘வேக்சினேஷன் பாஸ்’ எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருப்பது அவசியமாகும்.

ஆனால், கடந்த 6 மாதங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவா்கள் அதற்கான சான்று வைத்திருக்கும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்தச் சட்டம் விலக்கு அளிக்கிறது.

கடந்த டிசம்பரில் தாம் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக ஜோகோவிச் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறாா். எனவே அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே, விலக்கு பெற்று அவா் பிரெஞ்சு ஓபனில் விளையாட இயலும் எனத் தெரிகிறது.

என்றாலும், இந்த விவகாரம் தொடா்பாக தற்போதைய நிலையில் பிரெஞ்சு அரசு, ஜோகோவிச் தரப்பு என எவரும் கருத்து தெரிவிக்கவில்லை.

உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச், மே-ஜூன் காலகட்டத்தில் தொடங்க இருக்கும் பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் நடப்புச் சாம்பியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.