சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஒரு பந்து வீச்சாளராக பும்ரா வேண்டும் கேப்டனாக அல்ல : ராகுல் டிராவிட்

ஒரு கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருப்பதைக் காட்டிலும் அவர் ஒரு பந்து வீச்சாளராக அணியில் அதிகம் இருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:10 pm IST

ஒரு கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருப்பதைக் காட்டிலும் அவர் ஒரு பந்து வீச்சாளராக அணியில் அதிகம் இருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அனுபவம் இல்லாத ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்த உள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பும்ரா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், ராகுல் டிராவிட், பும்ரா ஒரு பந்துவீச்சாளராக அணிக்கு அதிகம் தேவை எனக் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார். 

இந்தப் பேட்டியில் பும்ரா குறித்து டிராவிட் கூறியிருப்பதாவது: “ பும்ரா எப்போதும் தனது பந்துவீச்சில் கவனமாக இருப்பார். ஆட்டத்தின் போக்கை கணிப்பதில் அவர் வல்லவர். ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்றவாறு திறம்பட பந்துவீசக் கூடியவர். அவர் இதுவரை கேப்டனாக இருந்ததில்லை அதனால் இந்த புதிய பொறுப்பு அவருக்கு சவாலானதாக இருக்கும். இருப்பினும், நாங்கள் அவருக்கு எங்களது ஆதரவை தொடர்ந்து அளிப்போம். ஒரு வேகப் பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படுவது சாதாரண காரியமல்ல. தனது பந்துவீச்சிலும் அவர் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் பீல்டிங் செட் செய்ய வேண்டும். கேப்டனாக இருப்பதைக் காட்டிலும் பும்ரா ஒரு பந்துவீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.