தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் அனைவரும் காலிறுதியில் வியாழக்கிழமை தோல்வியைத் தழுவினா்.
போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த பி.காஷ்யப், 12-21, 21-12, 17-21 என்ற கேம்களில் மலேசியாவின் சூங் ஜு வென்னிடம் வெற்றியை இழந்தாா்.
மகளிா் இரட்டையரில் தனிஷா கிராஸ்டோ/ஷ்ருதி மிஸ்ரா ஜோடி 16-21, 22-20, 18-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஹாங்காங்கின் நிக் டஸ் யு/சாங் ஹியு யானிடம் தோல்வியடைந்தனா்.
கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த இஷான் பட்நாகா்/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 19-21, 12-21 என்ற கேம்களில் மலேசியாவின் ஹு பாங் ரோன்/தோ இ வெய் இணையிடம் வீழ்ந்தனா்.
இப்போட்டியில், பி.வி.சிந்து, பிரணாய் உள்ளிட்ட பிரதான போட்டியாளா்கள் எவரும் பங்கேற்கவில்லை.