விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தென்னாப்பிரிக்க டி20 தொடரிலிருந்து ராகுல் விலகல்: பந்த் கேப்டன்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :8 ஜூன் 2022, 1:25 pm

DIN

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ தெரிவித்திருப்பதாவது, “ தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் முற்றிலுமாக விலகுகிறார். அவருக்குப் பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கேப்டனாக செயல்படுவார். ஹார்திக் பாண்டியா துணைக் கேப்டனாக செயல்படுவார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகுகிறார்.” எனத் தெரிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை (ஜூன் 9) முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.