இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற இந்திய அணி வீரர்கள் (படங்கள்)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் பலரும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள்.
இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற இந்திய அணி வீரர்கள் (படங்கள்)
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் பலரும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள்.

இந்திய அணி அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் அடுத்ததாகச் சுற்றுப்பயணம் செய்கிறது. அயர்லாந்தில் ஜூன் 26, 28 தேதிகளில் இரு டி20 ஆட்டங்களை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் ஜூன் 24-27 தேதிகளில் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7 அன்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12 அன்றும் தொடங்குகின்றன. இதன்பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

இந்நிலையில் டெஸ்டில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் சிலர், இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். விராட் கோலி, ஷுப்மன் கில், ஷர்துல் தாக்குர், பும்ரா, சிராஜ், புஜாரா, ஷமி, ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com