தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

54வது பந்தில் முதல் ரன் எடுத்த வீரர், கிண்டலாக பாராட்டிய சகவீரர்கள்

ரஞ்சிக்கோப்பைத் தொடரில் உத்தர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாசஷ்வி ஜெய்ஸ்வால் 54வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்தார்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2022, 12:06 pm

DIN

ரஞ்சிக்கோப்பைத் தொடரில் உத்தர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாசஷ்வி ஜெய்ஸ்வால் 54வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்தார்.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாசஷ்வி ஜெய்ஸ்வால் உத்தர பிரதேச அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

54வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்த அவர் தனது சகவீரர்களை நோக்கி பேட்டினை உயர்த்திக் காட்டினார். அதற்கு அவரது சக வீரர்கள் கிண்டலாக கைத்தட்டி தங்களது பாராட்டினைத் தெரிவித்தனர்.

கிரிக்கெட் வரலாற்றில் இது போன்று ஒரு பேட்ஸ்மேன் அதிக பந்துகள் எதிர்கொண்டு தனது முதல் ரன்னை எடுப்பது இது முதல் முறையல்ல. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் கடந்த 2008 ஆம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 40வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்தார். அதன்பின் அவர் ரசிகர்களை நோக்கி பேட்டினை உயர்த்திக் காட்டி மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.