
அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்று தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
டப்லினில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பெட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து அசத்தினார். சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்கி 77 ரன்கள் எடுத்தார்.
கடினமான இலக்கை அபாரமாக விரட்டிய அயர்லாந்து அணி, போராடித் தோற்றது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கேப்டன் ஆன்டி பால்பிர்னி 60 ரன்களும் பால் ஸ்டிர்லிங் 40 ரன்களும் டெக்டர் 39 ரன்களும் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தீபக் ஹூடா தேர்வானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.