ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்கள் அடிக்க முடியும்: சஞ்சு சாம்சன்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:42 am

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி.

மழை காரணமாக 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. குயிண்டன் டி காக் 48 ரன்களும் கிளாசென், மில்லர் ஆட்டமிழக்காமல் முறையே 74, 75 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. ஷ்ரேயஸ் ஐயர் 50 ரன்களும் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 86 ரன்களும் எடுத்தார்கள். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸரும் மூன்று பவுண்டரிகளும் அடித்தார். 

லக்னெளவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு சஞ்சு சாம்சன் கூறியதாவது:

தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் நன்குப் பந்துவீசினார்கள். ஷம்சி நிறைய ரன்கள் கொடுத்தார். எனவே அவருடைய ஓவரில் ரன்கள் குவிக்க இலக்கு வைத்திருந்தோம். கடைசியில் அவருக்கு ஒரு ஓவர் மீதமிருந்தது. கடைசி ஓவரில் நமக்கு 24 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் நான்கு சிக்ஸர்களை அடிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால் தான் கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு சென்றோம். கடைசியில் இரண்டு ஷாட்களை அடிக்க முடியாமல் தோற்றுவிட்டோம். ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர். அதை நாங்கள் அடித்திருந்தால் ஜெயித்திருப்போம். என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.