பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

புதிய கிரிக்கெட் விதிமுறைகள்: ஐசிசி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 10:56 am

DIN

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

டி20 கிரிக்கெட்டில் ஓவர்கள் வீச ஓர் அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் மீதமுள்ள ஓவர்களில் வட்டத்துக்குள் கூடுதலாக ஒரு வீரரை நிறுத்த வேண்டும். இந்த நடைமுறை ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடரவுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்த விதிமுறை அமலுக்கு வரும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசியின் முக்கியமான புதிய விதிமுறைகள்:

* பந்துவீச்சாளர் பந்து வீச ஓடி வரும்போது ஃபீல்டர் வேண்டுமென்றே நகர்ந்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும். 

* பந்துவீச்சாளர் பந்துவீசும் முன்பு, நடுவர் அருகே உள்ள பேட்டர் கிரீஸை விட்டு நகர்ந்தால் அவரை பந்துவீச்சாளர் ஆட்டமிழக்கச் செய்யலாம். அதுபோன்று ஆட்டமிழக்கச் செய்வது இனிமேல் ரன் அவுட் என அழைக்கப்படும். 

* கரோனாவின் பரவலைத் தடுக்க எச்சிலைக் கொண்டு பந்துகளைப் பளபளப்பாக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. 

* பந்துவீசும் முன்பு ஒரு பேட்டர் முன்னேறி வந்து அடிக்க வருவதைக் கவனித்து விட்டால், அந்த பேட்டரை பந்துவீச்சாளர் இதற்கு முன்பு ரன் அவுட் செய்ய முடியும். இனிமேல் அப்படிச் செய்ய முடியாது. பந்துவீசும் நடவடிக்கையை முழுவதுமாக முடிக்காமல் பந்தை பேட்டர் பக்கம் த்ரோ செய்யக் கூடாது. 

இந்த விதிமுறைகளைக் கடந்த மார்ச் மாதம், எம்.சி.சி. அமைப்பு பரிந்துரை செய்திருந்தது. தற்போதை அதனை கங்குலி தலைமையிலான ஐசிசி குழு அங்கீகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.