தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

2-வது டி20: சோதனை முயற்சியில் தோல்வியடைந்த ரோஹித் சர்மா

3-வது ஓவருக்குப் பிறகு புவனேஸ்வர் குமார் பந்துவீசவே வரவில்லை.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 5:33 am

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார். மே.இ. தீவுகள் அணியின் ஒபட் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். மே.இ. தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிராண்டன் கிங் 68 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் 2 ஓவர்களை மட்டுமே வீசினார். கடைசி 5 ஓவர்களில் 4 ஓவர்களை அவேஷ் கானும் அர்ஷ்தீப் சிங்கும் வீசினார்கள். 3-வது ஓவருக்குப் பிறகு புவனேஸ்வர் குமார் பந்துவீசவே வரவில்லை. கடைசி ஓவரில் மே.இ. தீவுகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது அவேஷ் கான் அந்த ஓவரை வீசினார். நோ பால் வீசி ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் கொடுத்து தனது முயற்சியில் தோற்றார். இதனால் ரோஹித் சர்மா விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். 

இதுபற்றி ரோஹித் சர்மா கூறியதாவது: இளம் வீரர்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும். புவனேஸ்வர் குமாரால் என்ன செய்யமுடியும் என நமக்குத் தெரியும். ஆனால் அர்ஷ்தீப் சிங்குக்கும் அவேஷ் கானுக்கும் வாய்ப்பு தராவிட்டால் கடைசி ஓவரில் அவர்கள் எப்படிப் பந்துவீசுவார்கள் என்பது நமக்குத் தெரியாமலே போய்விடும். அவர்களுக்கு வாய்ப்பும் ஆதரவும் அளிக்கப்படவேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.