இத்தாலி அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
இன்று, இந்திய ஏ அணி பிரான்ஸை எதிர்கொள்கிறது. கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, பிரான்ஸின் கார்னெட்டோவுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 24-வது நகர்த்தல்களுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்தார். அதேபோல ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா சி வீரர் கங்குலி சூர்யா சேகர், ஷிரோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார். இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பி வீரர் சாத்வனி ருனாக், பிரான்செஸ்கோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.
தமிழக வீரர் பிரக்ஞானந்தா, இத்தாலியின் லாரென்ஸோவுடனான ஆட்டத்தில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா டிரா செய்தார்.
இதையும் படிக்க: நாங்கள் சரியாக விளையாடினால் பதக்கத்தை வெல்லுவோம்: பிரக்ஞானந்தா