சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: உலக சாதனையை நாளை சமன் செய்வாரா தீபக் ஹூடா?

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் உலகச் சாதனையைச் சமன் செய்வதற்கான வாய்ப்பு...

News image
Updated On :17 ஆகஸ்ட் 2022, 3:57 pm IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் உலகச் சாதனையைச் சமன் செய்வதற்கான வாய்ப்பு இந்திய வீரர் தீபக் ஹூடாவுக்குக் கிடைத்துள்ளது. 

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 18-ல் தொடங்கும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 22-ல் நிறைவடைகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தீபக் ஹூடா இடம்பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் ஹூடா. சமீபத்தில் டி20 ஆட்டத்தில் சதமும் அடித்தார். இதுவரை 5 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்த 14 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்களில் ஹூடா தற்போது 2-வது இடத்தில் உள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் அவர் விளையாடி அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்று பெற்றுவிட்டால் உலக சாதனையை அவர் சமன் செய்துவிடுவார். ரொமானியாவின் சாத்விக், அதிகபட்சமாக 15 ஆட்டங்களில் இடம்பெற்று தொடர்ச்சியான வெற்றிகளைக் கண்டுள்ளார். 2-வது ஆட்டத்திலும் இடம்பெற்று வெற்றியில் பங்கேற்றால் புதிய உலக சாதனையை நிகழ்த்துவார் ஹூடா. ஜிம்பாப்வே ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்களிலும் ஹூடா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் (ஆடவர் கிரிக்கெட்)

15 - சாத்விக் (ரொமானியா)
14 - தீபக் ஹூடா (இந்தியா)
13 - டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.