25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜூனியர் உலக குத்துச் சண்டையில் முதன்முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை அண்டிம் பங்கல்  53கிலோ பிரிவில் ஜூனியர் உலக குத்துச் சண்டையில் முதன் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:07 am

DIN

இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை அண்டிம் பங்கல்  53கிலோ பிரிவில் ஜூனியர் உலக குத்துச் சண்டையில் முதன் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். 

யு-20 உலக குத்துச் சண்டை போட்டியில் அண்டிம் பங்கல் எனும்முதன் முறியாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். 

புல்கேரியாவை சேர்ந்த சோபியாவை 8-0 எனற கணக்கில் வென்று தங்கம் வென்றார் அண்டிம் பங்கல். மற்ற இரண்டு இந்தியர்கள் சோனம், பிரியங்கா முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். இதனால் இந்திய அணி 160 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருந்தது. ஜப்பான் 230 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அமெரிக்கா 124 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

“உங்களுடைய கடின உழைப்பு மற்றும் ஈடுபாட்டிற்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது. ஒளிமயமான வருங்காலத்திற்கு வாழ்த்துகள். தொடர்ந்து ஜொலித்துக்கொண்டு இருங்கள்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.