பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை மாற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்து அந்த அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
2021-ல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் இந்த வருடம் லக்னெள அணியில் இடம்பெற்று அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் தேர்வானார். 2018 முதல் அந்த அணியில் மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளார்.
எனினும் 2022 ஐபிஎல் போட்டியிலும் பஞ்சாப் அணி லீக் சுற்றின் முடிவில் 6-ம் இடத்தையே பிடித்தது. 2019, 2020, 2021, 2022 என கடந்த நான்கு ஆண்டுகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 6-ம் இடத்டையே பிடித்தது. ஐபிஎல் போட்டியில் இருமுறை மட்டுமே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.
இதையடுத்து பயிற்சியாளர் கும்ப்ளேவை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பஞ்சாப் அணி நிர்வாகம் உள்ளதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அடுத்ததாக, இந்த வருடம் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வாலையும் நீக்கிவிட்டு ஜானி பேர்ஸ்டோவைப் புதிய கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் செய்தி வெளியானது. இதையடுத்து இந்த சர்ச்சை குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஒரு விளையாட்டு இணையத்தளத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி குறித்து செய்தி வெளியாகியுள்ளது. எங்கள் அணியைச் சேர்ந்த எந்தவொரு நிர்வாகியும் யாருக்கும் இதுகுறித்து பேட்டியளிக்கவில்லை என்று பஞ்சாப் கிங்ஸ் அணி தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

மதுரை அருகே மின்னல் பாய்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு

காமன்வெல்த் செஸ்: இனியன் உள்பட தமிழக வீரா், வீராங்கனைகள் சிறப்பிடம்

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



