தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டங்களைப் பார்க்காதே: கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியாளர் கட்டளை!

எங்களுடைய வீரர்கள் அப்படிச் செய்தால் நான் மிகவும் வேதனையடைவேன் என்றார். 

News image

வங்கதேச வீரர்கள் (கோப்புப் படம்)

Updated On :13 டிசம்பர் 2022, 3:56 pm IST

டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக உலகக் கோப்பை ஆட்டங்களைப் பார்க்க வங்கதேச வீரர்களுக்குத் தடை விதித்துள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ.

இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், நாளை தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேச அணி. காயம் காரணமாக ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. இதனால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உனாட்கட், அபிமன்யு ஈஸ்வரன், செளரப் குமார், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் அணியின் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெஸ்ட் தொடர் இருப்பதால் எங்களுடைய வீரர்கள் சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டும். அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு டெஸ்டில் கலந்துகொள்ளும் ஒரு வீரர்,  அதிகாலை 3 மணி வரைக்கும் கால்பந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அது முட்டாள்தனமானது. எங்களுடைய வீரர்கள் அப்படிச் செய்தால் நான் மிகவும் வேதனையடைவேன் என்றார். 

கத்தார் உலகக் கோப்பைப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா - குரோசியா அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் பிரான்ஸும் மொராக்கோவும் நாளை மோதுகின்றன. இந்த இரு ஆட்டங்களும் வங்கதேச நேரப்படி நள்ளிரவு 1 மணிக்குத் தொடங்குகின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.