கே.எல். ராகுலுக்குக் காயம்: 2-வது டெஸ்டில் விளையாடுவாரா?

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் 2-வது டெஸ்டில் அவர் விளையாடுவது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கே.எல். ராகுலுக்குக் காயம்: 2-வது டெஸ்டில் விளையாடுவாரா?


இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் 2-வது டெஸ்டில் அவர் விளையாடுவது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் நாளை (டிசம்பர் 22) தொடங்குகிறது.

ஒருநாள் தொடரில் ஃபீல்டிங் செய்தபோது கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை. காயத்துக்காக மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2-வது டெஸ்டிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் சைனி ஆகியோர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

முதல் டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்பட்டார். இந்நிலையில் பயிற்சியின்போது கே.எல். ராகுலின் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2-வது டெஸ்டில் அவர் விளையாடுவது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியதாவது: காயம் அந்தளவுக்குத் தீவிரமாக இல்லை. அவர் நலமாகவே உள்ளார். மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகிறார்கள் என்றார்.

கே.எல். ராகுலால் 2-வது டெஸ்டில் விளையாட முடியாமல் போனால், இந்திய அணியின் கேப்டனாக புஜாரா செயல்படவுள்ளார். மேலும் ராகுலுக்குப் பதிலாக அறிமுக வீரர் அபிமன்யு ஈஸ்வரனுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com