யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடும் இந்திய வீரர்களுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் விராட் கோலி.
யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி, யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சனிக்கிழமையன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
2008-ல் யு-19 கேப்டனாக உலகக் கோப்பையை வென்றவர் விராட் கோலி. இந்நிலையில் இம்முறை இறுதிச்சுற்றுக்குச் சென்ற இந்திய அணியை ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய வீரர்களுடன் இணையம் வழியாகப் பேசி உற்சாகப்படுத்தியுள்ளார். கோலியின் அறிவுரைகள் மிகவும் உபயோகமாக இருந்ததாக யு-19 வீரர்கள் சமூகவலைத்தளங்களில் எழுதியுள்ளார்கள்.