யு-19 வீரர்களுடன் உரையாடி உற்சாகப்படுத்திய விராட் கோலி

யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடும் இந்திய வீரர்களுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் விராட் கோலி.
யு-19 வீரர்களுடன் உரையாடி உற்சாகப்படுத்திய விராட் கோலி

யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடும் இந்திய வீரர்களுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் விராட் கோலி.

யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி, யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சனிக்கிழமையன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

2008-ல் யு-19 கேப்டனாக உலகக் கோப்பையை வென்றவர் விராட் கோலி. இந்நிலையில் இம்முறை இறுதிச்சுற்றுக்குச் சென்ற இந்திய அணியை ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய வீரர்களுடன் இணையம் வழியாகப் பேசி உற்சாகப்படுத்தியுள்ளார். கோலியின் அறிவுரைகள் மிகவும் உபயோகமாக இருந்ததாக யு-19 வீரர்கள் சமூகவலைத்தளங்களில் எழுதியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com