மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆயிரமாவது ஒருநாள் ஆட்டம் இது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையும் படிக்க | யு19 உலகக்கோப்பை சாம்பியன் இந்தியா: பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய அணியில் தீபக் ஹூடா அறிமுக ஆட்டக்காரராக சேர்க்கப்பட்டுள்ளார். 6 பேட்டர்கள் மற்றும் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், யுஸ்வேந்திர சஹால், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.