உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் 2022 உலகக் கோப்பை கால்பந்தில் ரஷியாவுக்கு எதிராக விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது.
2022 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் பிளே ஆஃப் பிரிவில் போலந்து அணி வரும் மார்ச் 24-ம் தேதி மாஸ்கோவில் ரஷியாவை எதிர்கொள்கிறது. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா பலமுனை ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதையும் படிக்க | உக்ரைனில் கோரத் தாண்டவமாடும் ரஷியா: காரை அப்பளமாக நொறுக்கிய பீரங்கி
இதனால், ரஷியாவுடனான ஆட்டத்தில் விளையாட போலந்து அணி மறுப்பு தெரிவித்துள்ளது. போலந்து கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.
இந்த முடிவை ஆதரித்து ட்வீட் செய்துள்ள போலந்து நட்சத்திர கால்பந்து வீரர் ராபர்ட் லெவன்டௌஸ்கி, உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல் தொடரும் நிலையில் ரஷியாவுடன் விளையாடுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவே சரியான முடிவு என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.