நீரஜ் சோப்ராவுக்கு பரம வசிஷ்ட சேவா பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு நாளில் பரம வசிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்படவுள்ளது.
நீரஜ் சோப்ராவுக்கு பரம வசிஷ்ட சேவா பதக்கம்


டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு நாளில் பரம வசிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்படவுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அபினவ் பிந்த்ராவுக்கு அடுத்தபடியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இரண்டாவது ஹரியாணா வீரர். இதைக் கௌரவிக்கும் வகையில், குடியரசு தின நாளில் அவருக்கு பரம வசிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்படவுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் குடியரசு நாள் அணிவகுப்பில் நீரஜ் சோப்ரா குறிப்பு காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த அணிவகுப்பில் 10 ஒலிம்பிக் வீரர்கள் குறித்து காட்சிப்படுத்தப்படவுள்ளதாக ஹரியாணா அரசு தெரிவித்துள்ளது. 

நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் சுபேதராக உள்ளார். இவர் ராணுவ விளையாட்டு இன்ஸ்ட்டிடியூட் மற்றும் ஒலிம்பிக் திட்டப் பிரிவில் பயிற்சிக்காகத் தேர்வானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com