சதமடிக்க முடியாத சண்டிமல்: பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் இலக்கு

இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் இலக்கு...
தினேஷ் சண்டிமல்
தினேஷ் சண்டிமல்
Published on
Updated on
1 min read

முதல் டெஸ்டில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கிறது. கேலேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களும் பாகிஸ்தான் அணி 218 ரன்களும் எடுத்தன. 3-ம் நாள் முடிவில் இலங்கை அணி, 2-வது இன்னிங்ஸில் 96 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. சண்டிமல் 86, ஜெயசூர்யா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

4-ம் நாளான இன்று இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சண்டிமல் 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது நவாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் டெஸ்டில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு 342 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com