கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘கருப்பு வெள்ளை’ நேப்பியர் பாலத்தை நேரில் கண்டுகளித்த பிரக்ஞானந்தா (படங்கள்)

சென்னை நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளைக் கட்டங்களாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:54 am

DIN

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாடை முன்னிட்டு சென்னை நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளைக் கட்டங்களாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதனால் கருப்பு வெள்ளை நேப்பியர் பாலம், சென்னையில் அனைவரையும் ஈர்க்கும் ஓர் இடமாக மாறியிருக்கிறது. பலரும் அங்குச் சென்று செல்ஃபி, விடியோ எடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா, நேப்பியர் பாலம் உள்ள பகுதிக்குத் தனது குடும்பத்தினருடன் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். இத்தகவலை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் ஒரு செஸ் வீராங்கனை. அவரும் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறார். 

இந்த வருடம் மூன்று போட்டிகளை வென்ற பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் கார்ல்சனை இருமுறை வீழ்த்தியுள்ளார். சென்னை ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் பி அணியில் பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ளார். 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.