லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கவுன்டி ஆட்டத்தில் இந்தியாவின் புஜாரா இரட்டைச் சதம் அடித்துள்ளார்.
கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 2 பிரிவில் லார்ட்ஸில் சஸ்செக்ஸ் - மிடில்செக்ஸ் அணிகளுக்கிடையிலான நான்கு நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. சஸ்செக்ஸ் அணியின் கேப்டனான புஜாரா, இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் எடுத்தார். 403 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எதிரணியில் இந்தியாவின் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளார். சஸ்செக்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 523 ரன்கள் எடுத்தது.
இந்தப் பருவத்தில் புஜாரா எடுத்துள்ள 3-வது இரட்டைச் சதம். லார்ட்ஸில் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த முதல் சஸ்செக்ஸ் வீரர் என்கிற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். 118 வருடங்கள் கழித்து ஒரே கவுன்டி பருவத்தில் 3 இரட்டைச் சதம் அடித்த முதல் சஸ்செக்ஸ் வீரரும் அவர் தான்.
2022 கவுன்டி பருவத்தில் புஜாரா எடுத்த ரன்கள்
6(15)
201*(387)
109(206)
12(22)
203(334)
16(10)
170*(197)
3(7)
46(76)
231