சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
முன்னதாக, நாட்டின் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் இந்திய கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, செஸ் ஒலிம்பியாட் ஜோதி, தமிழக செஸ் வீரா்கள் பிரக்ஞானந்தா, விஜயலட்சுமி, குகேஷ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
தொடக்க விழாவுக்கு ரசிகர்கள் பலத்த பாராட்டு தெரிவித்துள்ளார்கள். தொடக்க விழா நிகழ்ச்சிகளை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வடிவமைக்க விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தொடக்க விழா பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
தொடக்க விழாவின் பின்னணியில் உழைத்த கிரியேட்டிவ் குழுவினருக்கு நன்றி (முதல்வர் ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான், விக்னேஷ் சிவன், நடிகை அதிதி ஷங்கர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.) நிறைவு விழா இதைவிடப் பெரிதாகவும் சிறப்பாகவும் இருக்கும். வீரர்களுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் விக்கேஷ் சிவன் கூறியதாவது:
இந்த வாய்ப்புக்கும் முதல் நாளில் இருந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையவேண்டும் என்பதற்கான உங்களுடைய ஆர்வமும் முயற்சிகளும் தான் இந்த வெற்றிக்குக் காரணம். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. ஆதரவளித்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, ஆகஸ்ட் 9 அன்று மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.34! 6 காசுகள் உயர்வு!

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
காதல் ஹீரோ - மாஸ் ஹீரோவான விஜய்! பாக்ஸிங் சாம்பியன் பத்ரி!
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly



