காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
பிர்மிங்கம் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 33 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணியின் ஜெஸ் ஜொனாசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2018 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20யில் முதல்முறையாக 50+ ரன்கள் எடுத்துள்ளார் ஹர்மன்ப்ரீத் கெளர்.
ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்களில் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 26 வயது ரேணுகா சிங் தாக்குர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பளுகல் அருகே தொழிலாளி மா்ம மரணம்

குமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



