காமன்வெல்த் போட்டிகள்: பயிற்சியாளர் உதவியுடன் போட்டிக்குத் தயாராகும் லவ்லினா

ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற லவ்லினா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்லவேண்டும் என்பதே...
காமன்வெல்த் போட்டிகள்: பயிற்சியாளர் உதவியுடன் போட்டிக்குத் தயாராகும் லவ்லினா


டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களான விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருடன் அவர் இணைந்தார். 

2022 பிர்மிங்கம் காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடும்போது மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக லவ்லினா புகார் தெரிவித்தார்.  காமன்வெல்த் கிராமத்திலிருந்து என்னுடைய பயிற்சியாளர் சந்தியா வெளியேற்றப்பட்டு விட்டார். பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் என்னுடைய பயிற்சி, போட்டி தொடங்கும் 8 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து காமன்வெல்த் போட்டிகளில் லவ்லினாவுக்குப் பயிற்சியளிக்க அவருடைய பயிற்சியாளர் சந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தற்போது தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் லவ்லினா.

நாளை (ஜூலை 29) காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நியூசிலாந்தின் அரியன் நிகோல்ஸனை எதிர்கொள்கிறார் லவ்லினா. காலிறுதிச்சுற்றில் வேல்ஸின் ரோசியுடன் மோதுகிறார். அனுபவம்மிக்க ரோசியை வீழ்த்திவிட்டால் அரையிறுதிக்குத் தகுதியடைந்து பதக்கத்தை உறுதி செய்வார் லவ்லினா . 

எனினும் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற லவ்லினா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்லவேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com