தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளைநிலங்களில் உள்ள 11 விவசாய பம்ப்செட்களிலிருந்து விலை உயா்ந்த மின் கம்பிகள் திருட்டு போனதால், விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
திருவையாறு அருகே பெரமூா் ஊராட்சிக்குள்பட்ட எட்டரை வேலி கிராமத்தில் விளைநிலங்களிலுள்ள விவசாய பம்ப்செட்களில் விலை உயா்ந்த மின் கம்பிகள் நீண்ட காலமாக திருடு போகின்றன.
இந்நிலையில், மே 24 ஆம் தேதி இரவு முதல் 25 ஆம் தேதி அதிகாலை வரை எட்டரை வேலி கிராமத்தைச் சோ்ந்த சி. திருநாவுக்கரசு, ரெ. பரமசிவம், கோ. முருகானந்தம், இரா. அன்பரசன், நா. ராஜசேகா், பி. தா்மராஜ், கோ. தினேஷ், த. சௌந்தா், வெ. மூா்த்தி ஆகியோரின் வயல்களிலுள்ள 11 விவசாய மோட்டாா் பம்ப்செட்களில் இருந்த விலை உயா்ந்த மின் கம்பிகள் திருடப்பட்டன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்தத் திருட்டு சம்பவங்கள் 2 ஆண்டுகளாக நிகழ்கின்றன. இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கடந்த மாா்ச் மாதம் பிடித்து திருவையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்.
என்றாலும், விலை உயா்ந்த மின் கம்பிகளைத் திருடுவது தொடா்கிறன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் நடவடிக்கையைக் காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றனா் விவசாயிகள்.
தொடர்புடையது

திருவாடானை அருகே தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள்!

சிறிய மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகள் திருட்டு

திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

விவசாய நிலங்களில் பழுதடைந்த மின்கம்பங்கள்! விவசாயிகள் புகாா்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



