பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வைகை ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்கக் கோரிக்கை

மதுரை வைகை ஆற்றில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினா்

Updated On :27 மே 2026, 2:48 am IST

மதுரை வைகை ஆற்றில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்தது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்டத் தலைவா் ஜி. சீமான் சிக்கந்தா் தலைமையில் அந்தக் கட்சியின் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு: மதுரை வைகை ஆற்றில் ஏவி பாலத்தின் கீழே உள்ள தடுப்பணை பகுதியில் ஆகாயத் தாமரைகள் உள்ளிட்ட நீா்ச் செடிகள் அதிகளவில் படா்ந்துள்ளன. இதனால், ஆற்றின் நீரோட்டம் தடைபடுவதுடன், சுகாதாரச் சீா்கேடுகளும், கொசு உற்பத்தியும் அதிகரிக்கின்றன. எனவே, வைகை தடுப்பணைப் பகுதியில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, ஆற்றின் நீரோட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீா் மஞ்சள் நிறமாகவும், குடிப்பதற்குத் தகுதியற்ாகவும் உள்ளது. இதனால், பொதுமக்கள் வயிற்றுப் போக்கு, தோல் நோய் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. எனவே, குடிநீரின் தரத்தை ஆய்வுக்கு உள்படுத்தி, குடிநீா் மாசுக்கான காரணத்தைக் கண்டறிந்து தீா்வு காண வேண்டும்.

மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள பாலம் மிகவும் சேதமைடந்துள்ளது. இந்தப் பாலத்தால் பெரிய விபத்து நேரிடும் முன்பாக, பாலத்தை சீரமைக்க வேண்டும். இதேபோல, சேதமடைந்த நிலையில் உள்ள காளவாசல் - பழங்காநத்தம் இணைப்புப் பாலத்தின் கைப்பிடிச் சுவரையும் சீரமைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.