இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் பலரும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள்.
இந்திய அணி அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் அடுத்ததாகச் சுற்றுப்பயணம் செய்கிறது. அயர்லாந்தில் ஜூன் 26, 28 தேதிகளில் இரு டி20 ஆட்டங்களை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் ஜூன் 24-27 தேதிகளில் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7 அன்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12 அன்றும் தொடங்குகின்றன. இதன்பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.
இந்நிலையில் டெஸ்டில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் சிலர், இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். விராட் கோலி, ஷுப்மன் கில், ஷர்துல் தாக்குர், பும்ரா, சிராஜ், புஜாரா, ஷமி, ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்கள்.
ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?: கங்குலி பதில்
இந்திய அணியில் இடமில்லை: நள்ளிரவில் வேதனையை வெளிப்படுத்திய தெவாதியா
பிருத்வி ஷாவுக்கு ஏன் வாய்ப்பில்லை?: ரசிகர்கள் கேள்வி
ஐபிஎல் போட்டியில் நான் விளையாடக் கூடாது என்றார்கள்: பேர்ஸ்டோ
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற 32 அணிகளின் பட்டியல்