மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடைசி டி20: மழையால் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம் ரத்து

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மழையால்  ரத்து செய்யப்பட்டது.

News image
Updated On :19 ஜூன் 2022, 6:02 pm

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மழையால்  ரத்து செய்யப்பட்டது.

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இரவு 7 மணிக்குத் தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டித் தொடங்க தாமதமானது.

பின், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர்.

இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை  எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின், இறுதியில் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 

இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-2 என்கிற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.