கடைசி டி20: மழையால் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம் ரத்து

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மழையால்  ரத்து செய்யப்பட்டது.
கடைசி டி20: மழையால் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம் ரத்து

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மழையால்  ரத்து செய்யப்பட்டது.

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இரவு 7 மணிக்குத் தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டித் தொடங்க தாமதமானது.

பின், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர்.

இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை  எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின், இறுதியில் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 

இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-2 என்கிற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com