பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

அட, இப்படி கூட ஒருவர் அவுட் ஆக முடியுமா? (விடியோ)

இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்டில் நடைபெற்றுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2022, 4:53 pm IST


எதிர்முனையில் இருக்கும் சக பேட்டர் எந்த விதத்திலாவது ஒரு பேட்டர் ஆட்டமிழப்பதற்குக் காரணமாக முடியுமா?

ரன் அவுட் செய்யலாம். ஆனால் கேட்ச்சால் ஆட்டமிழப்பதற்கு?

இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்டில் நடைபெற்றுள்ளது.

லீட்ஸில் நடைபெறும் 3-வது டெஸ்டில் முதல் நாளன்று நியூசிலாந்து அணி, 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. மிட்செல் 78, பிளண்டல் 45 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ஹென்றி நிகோல்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எப்படித் தெரியுமா?

சுழற்பந்து வீச்சாளர் லீச் வீசிய பந்தை அவர் அடிக்க, பந்து நேராக எதிர்முனையில் இருந்த சக பேட்டர் மிட்செல் பக்கம் வேகமாகச் சென்றது. தன்னை நோக்கி பந்து வந்ததால் அதற்கு வழிவிட பேட்டைத் தூக்கினார் மிட்செல். ஆனால் அந்தப் பந்து எதிர்பாராதவிதமாக மிட்செல்லின் பேட்டில் பட்டு பிறகு மிட் ஆஃப் பகுதியில் நின்றுகொண்டிருந்த லீஸிடம் கேட்ச் ஆக மாறியது. எங்கு அடித்த பந்து கடைசியில் எங்குச் சென்று சேர்ந்தது பாருங்கள்!

இப்படி இன்னொரு பேட்டரின் பேட்டில் பந்து பட்டு அதைக் கேட்ச் பிடித்தால் அது அவுட் தானா?

எம்சிசி விதிமுறைகளின் படி ஒரு பேட்டர் அடித்த பந்து - நடுவர், ஃபீல்டர், எதிர்முனையில் உள்ள பேட்டர் மீது பட்டு அதை கேட்ச் பிடித்தால் அது அவுட் தான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.