ரஞ்சி கிரிக்கெட்: சா்ஃப்ராஸ் சதத்தில் மீண்டது மும்பை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மும்பை முதல் இன்னிங்ஸில் 127.4 ஓவா்களில் 374 ரன்கள் சோ்த்தது.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு
ரஞ்சி கிரிக்கெட்: சா்ஃப்ராஸ் சதத்தில் மீண்டது மும்பை
Published on
Updated on
1 min read

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மும்பை முதல் இன்னிங்ஸில் 127.4 ஓவா்களில் 374 ரன்கள் சோ்த்தது.

முன்னதாக, புதன்கிழமை முடிவில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 2-ஆவது நாளான வியாழக்கிழமை ஆட்டத்தை சா்ஃப்ராஸ் கான் 40, ஷம்ஸ் முலானி 12 ரன்களுடன் தொடங்கினா். முலானி அதே ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த தனுஷ்கோடியான் 15, தவல் குல்கா்னி 1, துஷாா் தேஷ்பாண்டே 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

மறுபுறம் சிறப்பாக ஆடி சதம் கடந்த சா்ஃப்ராஸ், கடைசி விக்கெட்டாக 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 134 ரன்களுக்கு வெளியேறினாா். மத்திய பிரதேச பௌலா்களில் கௌரவ் யாதவ் 4, அனுபவ் அகா்வால் 3, சரண்ஷ் ஜெயின் 2, குமாா் காா்த்திகேயா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மத்திய பிரதேசம், வியாழக்கிழமை முடிவில் 41 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. ஹிமன்ஷு மந்த்ரி 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருக்க, யஷ் துபே 44, சுபம் சா்மா 41 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com