அஸ்வின் வீட்டுக்குப் பூங்கொத்து அனுப்பிய கபில் தேவ்

கைப்பட எழுதிய வாழ்த்துக் கடிதத்தையும் அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி. 
அஸ்வின் வீட்டுக்குப் பூங்கொத்து அனுப்பிய கபில் தேவ்
Published on
Updated on
1 min read

தன்னுடைய சாதனையைத் தாண்டியதற்காக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்குப் பூங்கொத்தைப் பரிசாக வழங்கியுள்ளார் கபில் தேவ்.

இலங்கைக்கு எதிரான மொஹலி டெஸ்டில் 6 விக்கெட்டுகள் எடுத்ததோடு பேட்டிங்கில் அரை சதமும் எடுத்து அசத்தினார் அஸ்வின். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவ் எடுத்திருந்த 434 விக்கெட்டுகளைத் தாண்டி சென்று, 436 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய சாதனையைத் தாண்டிய அஸ்வினைப் பாராட்டும் விதமாக அவருடைய வீட்டுக்குப் பூங்கொத்து ஒன்றை அனுப்பியுள்ளார் கபில் தேவ். இதுபற்றி பிசிசிஐக்கு அளித்த விடியோ பேட்டியில் அஸ்வின் கூறியதாவது:

கனவு போல உள்ளது. இவ்வளவு விக்கெட்டுகள் எடுக்கவேண்டும் என நான் எண்ணியதே இல்லை. என் வீட்டுக்குப் பூங்கொத்து அனுப்பி, அத்துடன் அவரைத் தாண்டிச் சென்றதற்காக கைப்பட எழுதிய வாழ்த்துக் கடிதத்தையும் அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி. 

செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் என்னை மிகவும் பாராட்டியுள்ளார். ஒருநாள் அழைத்து என்னிடம் ரோஹித் சொன்னார், அஸ்வின் நீ இப்போதுதான் அணிக்குள் வந்துள்ளாய். அணியின் கூட்டங்களில் நீ நன்குப் பேசுவதற்காகப் பாராட்டுகிறேன். எனினும் எதற்காக நாங்கள் அப்படிச் சொல்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நீ இந்திய அணிக்குத் தேர்வாகிவிட்டால் ஆடுகளத்தில் அடிப்படை விஷயங்களை ஒழுங்காகச் செய்யக்கூட சிரமப்படக்கூடாது என்றார். அது எனக்கான பாதையைத் திறந்துவிட்டது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com