ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக் காலம் நீட்டிப்பு

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக் காலம் நீட்டிப்பு

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் அதிகாரம் கொண்டது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். இதில் இந்தியா உள்பட 24 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிசிசிஐ செயலர் ஜெய்ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com