இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியில் கருணாரத்னே இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இலங்கை அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.
4 ஆட்டங்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 4-ம் இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 7 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன. நியூசிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டால் 7 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும்.