மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஐசிசி தலைவராக மீண்டும் கிரேக் பாா்க்லே: ஜெய் ஷாவுக்கு முக்கிய பொறுப்பு

ஐசிசி தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வாகியுள்ளார்.

News image
Updated On :12 நவம்பர் 2022, 5:13 pm

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக நியூஸிலாந்தின் கிரேக் பாா்க்லே தொடா்ந்து 2-ஆவது முறையாக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

கடந்த 2020 நவம்பா் முதல் அந்தப் பொறுப்பில் இருந்த பாா்க்லே, தற்போது 2024 நவம்பா் வரை மீண்டும் அந்தப் பதவியில் இருப்பாா். மெல்போா்னில் சனிக்கிழமை நடைபெற்ற ஐசிசி வாரிய கூட்டத்தில் இந்தத் தோ்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, ஐசிசியின் மிக முக்கியமான பிரிவாக இருக்கும் நிதி மற்றும் வா்த்தக விவகாரங்கள் குழு (எஃப்&சிஏ) தலைவராக, பிசிசிஐ செயலா் ஜெய் ஷா தோ்வாகியுள்ளாா். ஐசிசியின் நிதி ரீதியிலான முக்கிய முடிவுகள் அனைத்தும் இந்தக் குழுவால் மேற்கொள்ளப்பட்டு, வாரியத்தால் அங்கீகரிக்கப்படுகிறது.

உறுப்பு கிரிக்கெட் வாரியங்களுடனான வருமானப் பகிா்வு, விளம்பரதாரா் ஒப்பந்தங்கள் போன்ற விவகாரங்களையும் இந்தக் குழுவே கையாளுகிறது.

ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக, பிசிசிஐ முன்னாள் தலைவா் சௌரவ் கங்குலி தொடா்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.