டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

இந்திய ஏ அணியில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழக வீரர்!

இந்திரஜித்துக்கு வாய்ப்பளிப்பதற்குப் பதிலாக யாஷ் துல்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Published On :

டிசம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. அதற்கு முன்பு இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 நாள் இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 29 அன்றும் 2-வது டெஸ்ட் டிசம்பர் 6 அன்றும் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த இரு ஆட்டங்களிலும் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஏ அணியில் புஜாரா, உமேஷ் யாதவ் விளையாடுகிறார்கள். கேரளத்தைச் சேர்ந்த ரோஹன் குண்ணுமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 24 வயது குண்ணுமல் இந்த வருடம் 9 முதல்தர இன்னிங்ஸில் 4 சதங்கள் அடித்துள்ளார். மேலும் இளம் வீரர்களான யாஷ் துல், யாஷவி ஜெயிஸ்வால் ஆகிய இருவரும் இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ளார்கள். 

இந்நிலையில் சமீபத்தில் முடிந்த ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் சதமடித்தார் தமிழக வீரர் பாபா இந்திரஜித்.  கூடுதலாக ஒரு அரை சதமும். 3 ஆட்டங்களில் 396 ரன்கள் எடுத்தார். சராசரி - 99.00. மேலும் துலீப் கோப்பை இறுதிச்சுற்றில் சதமடித்தார். 28 வயது இந்திரஜித்தை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. இந்நிலையில் பாபா இந்திரஜித் இந்திய ஏ அணிக்குத் தேர்வாகவில்லை. இந்திரஜித்துக்கு வாய்ப்பளிப்பதற்குப் பதிலாக யாஷ் துல்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.