இந்த வருட இறுதி வரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனப் பிரபல வீரர் ஜானி பேர்ஸ்டோ கூறியுள்ளார்.
கோல்ஃப் விளையாடும்போது ஏற்பட்ட காயத்தால் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவால் இடம்பெற முடியாமல் போனது. மேலும் சமீபத்தில் முடிவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான 7 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலும் அவர் விளையாடவில்லை.
காலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பேர்ஸ்டோ தற்போது ஓய்வில் உள்ளார். இந்நிலையில் இன்ஸ்டகிராமில் தன்னுடைய காயத்தின் நிலை பற்றி பேர்ஸ்டோ கூறியதாவது:
அனைவருக்கும் என்னுடைய காயம் குறித்த தகவலை அளிக்கிறேன். அறுவைச் சிகிச்சை நல்லபடியாக நடைபெற்றது. 3 வாரங்கள் ஆகிவிட்டன. அடுத்த சில வாரங்கள், மாதங்கள் முக்கியமானவை. நான் எப்போது மீண்டும் விளையாட வருவேன் என்பதை இப்போதே கூற முடியாது. முதலில் இரு கால்களையும் நகர்த்த வேண்டும். எல்லாம் சரியாக வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம், 2022-ல் நான் எதுவும் விளையாட மாட்டேன். 2023-ல் விளையாட காத்திருக்கிறேன் என்றார். இதனால் டிசம்பரில் பாகிஸ்தானுக்குச் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. கடைசியாக விளையாடிய 10 டெஸ்டுகளில் 6 சதங்கள் எடுத்துள்ளதால் பேர்ஸ்டோவின் வருகையை இங்கிலாந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: ஆட்சியா் வந்தனா காா்க் ஆய்வு

மின்னணு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி: ஆட்சியா் ஆய்வு
நாளைய மின் தடை - பாப்பிரெட்டிப்பட்டி
காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு; மனைவி காயம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



