உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, இதுவரை எந்த ஆட்டத்திலும் இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து தெ..ஆ. டி20 தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
ட்விட்டரில் பும்ரா கூறியதாவது:
இந்தமுறை டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது. என்னுடைய அன்பானவர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. ஆஸ்திரேலியாவில் விளையாடும் இந்திய அணிக்கு ஆதரவாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.