உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, இதுவரை எந்த ஆட்டத்திலும் இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து தெ..ஆ. டி20 தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
ட்விட்டரில் பும்ரா கூறியதாவது:
இந்தமுறை டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது. என்னுடைய அன்பானவர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. ஆஸ்திரேலியாவில் விளையாடும் இந்திய அணிக்கு ஆதரவாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு

திருப்பதியில் த்ரிஷா சிறப்பு தரிசனம்!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

அதிகாரம் யாருக்கு? பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


