கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

தமிழகத்துக்கு 2 வெண்கலம்

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 2 விளையாட்டுகளில் தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

Updated On :10 அக்டோபர் 2022, 12:23 am IST

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 2 விளையாட்டுகளில் தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

சைக்கிளிங் விளையாட்டில் ஆடவருக்கான 119 கி.மீ. மாஸ்டு ஸ்டாா்ட் பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீநாத் லக்ஷ்மிகாந்த் 3-ஆம் இடம் பிடித்தாா். பஞ்சாபின் ஹா்ஷ்வீா் சிங் ஷெகோன், உத்தர பிரதேசத்தின் அரவிந்த் பன்வா் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா்.

மகளிருக்கான டிரையத்லானில் எஸ். ஆா்த்தி 1 மணி நேரம் 13.17 நிமிஷங்களில் 3-ஆவதாக இலக்கை எட்டி வெண்கலம் பெற்றாா். குஜராத்தின் பிரக்ஞா மோகன் (1:7.32) தங்கமும், மகாராஷ்டிரத்தின் மான்சி மோஹிதே (1:13.10) வெள்ளியும் வென்றனா்.

போட்டியின் பதக்கப்பட்டியலில் ஞாயிற்றுக்கிழமை நிறைவில் தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் நிலைத்திருக்கிறது. சா்வீசஸ் அணியினா் 51 தங்கம், 33 வெள்ளி, 29 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனா். ஹரியாணா 95 பதக்கங்களுடன் (31/29/35) இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரம் 119 பதக்கங்களுடன் (30/33/56) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.