தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வருண் சக்ரவர்த்தியின் தலைகீழ் பயணம்!

தமிழகத்தைச் சேர்ந்த 31 வயது வருண் சக்ரவர்த்திக்கு மட்டுமே எல்லாமே தலைகீழாக நடந்துள்ளது. 

News image
Updated On :12 அக்டோபர் 2022, 1:52 pm IST

வழக்கமாக ஒரு வீரர் இந்திய டி20 அணியில், உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

உள்ளூர் ஆட்டங்களில் முதலில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும்.

இதைப் பார்த்து விட்டு ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்வார்கள். இதன்பிறகு ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாட வேண்டும். திறமையை நன்கு வெளிப்படுத்தினால் தொடர் வாய்ப்புகள் கிடைக்கும். 

தேர்வுக்குழு உறுப்பினர்கள் இதைப் பார்த்து இந்திய அணிக்குத் தேர்வு செய்வார்கள்.

இந்திய அணிக்குத் தேர்வானாலும் 11 பேரில் ஒருவராக உடனே இடம் கிடைத்து விடாது. அதற்கும் போராட வேண்டும். இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து திறமையாக விளையாடினால் பிறகு உலகக் கோப்பை அணியிலும் இடம் கிடைக்கும்.

இப்படித்தான் படிப்படியாக மேலேற முடியும்.

தமிழகத்தைச் சேர்ந்த 31 வயது வருண் சக்ரவர்த்திக்கு மட்டுமே எல்லாமே தலைகீழாக நடந்துள்ளது. 

உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் எதிலும் விளையாடாமல் நேராக ஐபிஎல் போட்டியில் விளையாடினார் வருண் சக்ரவர்த்தி. அங்குத் திறமையை வெளிப்படுத்தியதால் இந்திய டி20 அணியில் விளையாட உடனே வாய்ப்பு கிடைத்தது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய வருண், அடுத்து நேராக டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வானார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 உலகக் கோப்பை ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம், உலகக் கோப்பை என பெரிய தளங்களில் ஒரு சுற்று சுற்றி விட்டுக் கடைசியாக உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் விளையாட வந்திருக்கிறார் வருண் சக்ரவர்த்தி.

6 சர்வதேச டி20 ஆட்டங்கள், 42 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி முடித்த பிறகு தமிழக அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.

2022 சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழக அணி முதல் ஆட்டத்தில் தோற்றாலும் வருண் அபாரமாகப் பந்து வீசினார். 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்து 12 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.