வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்குக் காயம் ஏற்பட்டதையடுத்து இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது.
பெங்களூரில் நடைபெற்ற முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில் முதுகு வலி காரணமாக இந்தத் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா விலகியுள்ளார். இதையடுத்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா விளையாடவில்லை. தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஷர்துல் தாக்குர், இந்திய ஏ அணியினருடன் விரைவில் இணையவுள்ளார்.
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட், செப்டம்பர் 8 அன்று தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


