முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மும்பை இந்தியன்ஸ்: பதவி உயர்வு பெற்ற ஜெயவர்தனே, ஜாகீர் கான்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த ஜெயவர்தனேவும் ஜாகீர் கானும் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.

News image
நீதா அம்பானியுடன் ஜெயவர்தனே (வலது)
Updated On :14 செப்டம்பர் 2022, 7:06 am

DIN

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த ஜெயவர்தனேவும் ஜாகீர் கானும் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை வகித்த இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்தனே, தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூன்று டி20 அணிகளுக்கான உலகளாவிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ், ஐஎல்டி20யில் விளையாடும் எம்ஐ எமிரேட்ஸ், எஸ்ஏ 20யில் விளையாடும் எம்ஐ கேப் டவுன் ஆகிய மூன்று டி20 அணிகளின் செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக ஜெயவர்தனே செயல்படவுள்ளார். மூன்று அணிகளுக்கான பயிற்சியாளர்களின் பணிகள், அணிகளுக்கான வீரர்களின் தேர்வு போன்றவற்றை அவர் கவனித்துக் கொள்வார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநராக இருந்த ஜாகீர் கான், தற்போது மூன்று டி20 அணிகளுக்கான கிரிக்கெட் நடவடிக்கைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

2017 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டார் ஜெயவர்தனே. இக்காலக்கட்டத்தில் மும்பை அணி மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்றது. ஆறு ஆண்டுகளில் மூன்று முறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று மூன்று முறையும் கோப்பையை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆகியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

தற்போதைய நடவடிக்கைகளால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.