இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெர்பியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. பெளச்சியர் 34 ரன்களும் ஃப்ரேயா கெம்ப் 51 ரன்களும் எடுத்தார்கள். ஸ்னேக் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணிக்கு மந்தனாவும் ஷெஃபாலி வர்மாவும் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். ஷெஃபாலி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. 13 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்த மந்தனா, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இந்திய மகளிர் அணி, 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக மந்தனா தேர்வானார்.
3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனில் உள்ளன. 3-வது டி20 ஆட்டம் நாளை பிரிஸ்டாலில் நடைபெறவுள்ளது.
ஆசிய கோப்பை: அடையாளம் காட்டியது என்ன?
உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கம்: சஞ்சு சாம்சன் வெளியிட்ட பதிவு!
இந்த இரு வீரர்களையா தேர்வு செய்யவில்லை?: அசாருதீன் ஆச்சர்யம்!
அது ஏன் இல்லை, இது ஏன் இல்லை எனக் கேட்கக் கூடாது...: உலகக் கோப்பை அணி பற்றி கவாஸ்கர்
அனைத்து இந்திய டி20 உலகக் கோப்பை அணிகளிலும் இடம்பிடித்த ஒரே வீரர்!
தேர்வுக்குழுத் தலைவராக நான் இருந்திருந்தால்...: உலகக் கோப்பைக்கான இந்திய அணி பற்றி ஸ்ரீகாந்த்