தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

ரசிகர்கள் கவலை: டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகல்?

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published On :1 பிப்ரவரி 2024, 3:57 pm IST

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, முதல் டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இந்நிலையில் சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரபூர்வத் தகவல் இன்னும் வெளிவரவில்லையென்றாலும் இந்தத் தகவல் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல வேண்டுமென்றால் பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலையில் அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவைத் தரும் என ரசிகர்கள் கருதுகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.