எந்த வீரர் மீதாவது கோபப்பட்டால் தான் பந்துவீச்சாளர் பக்கமுள்ள பேட்டரை ரன் அவுட் செய்வேன் என இங்கிலாந்து வீரர் மொயீன் அலி கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. அவுட் என நடுவர் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறினார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பிரபல இங்கிலாந்து வீரர் மொயீன் அலி கூறியதாவது:
இது எனக்கானது அல்ல. யார் மீதாவது பயங்கர கோபம் இருந்தாலொழிய யாரையும் இந்த முறையில் ரன் அவுட் செய்ய மாட்டேன். இது ஐசிசியின் விதிமுறையில் உள்ளது. இதில் முறைகேடு எதுவும் இல்லை. எனவே இதைச் செய்பவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இது வழக்கமான ஒன்றாக மாறக் கூடாது. இந்த முறையில் விக்கெட் எடுக்க நாம் மெனக்கெடுவதில்லை. ரன் அவுட்டிலாவது கொஞ்சம் உழைப்பு உள்ளது. அதேபோலத்தான் இதர விக்கெட் எடுக்கும் முறைகளிலும். பேட்டர் எப்போது கிரீஸை விட்டு வெளியேறுவார் எனத் தெரிந்து ஆட்டமிழக்கச் செய்வது இது. சிறுவயதில் கிரிக்கெட் விளையாடியபோதும் இதுபோலச் செய்ததில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!

அமா்நாத் யாத்ரீகர்கள் பதிவு செய்யப்பட்ட தேதியில் மட்டுமே புனித பயணம்: ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவுறுத்தல்
வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 2,300 பேர் பலி! 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பு







