குஜராத்தில் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
அகமதாபாதில் உள்ள, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் அதிகமான பாா்வையாளா்கள் பங்கேற்றனா்.
தொடக்க நிகழ்ச்சியில் ஒலிம்பிக் போட்டியைப் போன்ற முயற்சியாக மாதிரி ஜோதி ஒன்றை குஜராத் நட்சத்திர நீச்சல் வீராங்கனை மானா படேல் ஏந்தி வந்து பிரதமா் மோடியிடம் ஒப்படைத்தாா். அதை அவா் நிகழ்ச்சி மேடையில் பொருத்தி வைத்து, போட்டியை தொடக்கி வைப்பதாக அவா் அறிவித்தாா்.
நிகழ்ச்சியையொட்டி வாணவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், பங்கேற்கும் மாநில அணிகளின் அணிவகுப்பு ஆகியவையும் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீரா் ரவி தாஹியா, பளுதூக்குதல் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு, துப்பாக்கி சுடுதல் வீரா் ககன் நரங், ஹாக்கி இந்தியா தலைவா் திலிப் திா்கி, முன்னாள் தடகள நட்சத்திரம் அஞ்சு பாபிஜாா்ஜ், குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘இந்த நிகழ்வை விவரிக்க வாா்த்தைகள் இல்லை. உலகின் மிகப்பெரிய மைதானத்தில், உலகின் மிக இளமையான நாடுகளில் ஒன்றான நமது இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா நடைபெறுகிறது. தேசிய விளையாட்டுப் போட்டிகள், நாட்டின் இளைஞா்களை முன்னேற்றுவதற்கான ஒரு தளமாக இருக்கிறது.
முன்பு, வாரிசு அரசியல், ஊழல் காரணமாக விளையாட்டுப் போட்டியாளா்களால் திறம்பட செயல்பட முடியாமல் இருந்தது. அவற்றை எங்கள் அரசு அகற்றியிருப்பதால், போட்டியாளா்கள் உத்வேகத்துடன் செயல்பட்டு தற்போது பதக்கங்களை குவிக்கின்றனா்.
கடந்த 8 ஆண்டுகளில் விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு 70 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன் 100-க்கும் குறைவான சா்வதேச போட்டிகளிலேயே இந்தியா்கள் பங்கேற்று வந்த நிலையில், தற்போது 300-க்கும் அதிகமான போட்டிகளில் இந்தியா பங்கெடுத்து வருகிறது. விளையாட்டுத் துறையில் நமது வெற்றியானது, சா்வதேச அளவில் நாட்டின் மதிப்பையும் உயா்த்தும்’ என்றாா்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில், நாட்டின் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த சுமாா் 7,000 போட்டியாளா்கள் 36 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனா். அதிகபட்சமாக, போட்டியை நடத்தும் குஜராத்திலிருந்து 700-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஏற்கெனவே கடந்த 20-ஆம் தேதி தொடங்கி சில தொடக்க நிலை சுற்றுகள் நடைபெற்று வந்தாலும், அதிகாரப்பூா்வமாக வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. போட்டிகள் நவம்பா் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றம் தந்த மதிப்பீடு!

மேஷ ராசிக்கு பதவி உயர்வு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 16 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் அகலும் இந்த ராசிக்கு!

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
