8 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹால் 2022 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அந்த ஆண்டு ஊதா நிறத் தொப்பி (அதிக விக்கெட்டுகளுக்காக) விருது வாங்கினார். 27 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
தற்போது ஒரு நேர்காணலில் சாம்சன் தனக்கு அதிக சுதந்திரம் கொடுத்ததாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
நான் விளையாடிய 3 கேப்டன்களும் (தோனி, ரோஹித், விராட்) எனக்கு நல்ல சுதந்திரம் கொடுத்தார்கள். ஐபிஎல்-இல் சஞ்சு சாம்சன் எனக்கு பிடித்தமானவர். தோனி போன்றவர். அவர் எப்போதும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கிறார். எனது பந்து வீச்சு திறன் 10 சதவிகிதம் முன்னேறியுள்ளதற்கு அவர்தான் காரணம். 4 ஓவர்கள் இருக்கிறது; நீங்கள் எப்படி வேண்டுமானாலும் போடலாம் என சாம்சன் எனக்கு உறுதியளிப்பார்.